9-ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா! (படங்கள்)

10:40 AM Edit This 0 Comments »
பரங்கிப்பேட்டை மீராப்பள்ளியுடன் இணைந்த அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யாவின் 9ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா கடந்த திங்கள் அன்று காலை மீராப்பள்ளியில், அதன் நிர்வாகி கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் தலைமையில் நடைப்பெற்றது. 

இதில் முஹம்மது முபாரக் அலி (மேலப்பாளைம்), உமர் ஃபாருக்  (பொதக்குடி) மற்றும் முஹம்மது அஷ்ரஃப் அலி (கடலூர்) ஆகிய மூன்று மாணவர்கள் ஹாஃபிழ் பட்டம் பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பட்டங்கள், தங்க பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும் கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான எம்.எஸ் முஹம்மது யூனுஸ், ஜக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் எம். ஹமீது அப்துல் காதர், மீராப்பள்ளி நிர்வாகிகளான எஸ். அலி அக்பர் மற்றும் ஜி.எம். நெய்னா மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துஸ்மது ரஸாதி கிராஅத் ஓதி துவக்கி வைத்தர்.

அதனைத் தொடர்ந்து வரவேற்புரையுடன ஆண்டறிக்கை வாசிக்கபடப்டது. மாணவர்களுக்கு பட்டம் (ஸனது) மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.  முன்னதாக மாணவர்களை வாழ்த்தி ஆலிம் பெருமக்கள் உரையாற்றினார்கள். 

விழா நிகழ்வை எம். முஹம்மது ஷேக் ஆதம் மழாஹிரி தொகுத்து வழங்கினார். விழா நிறைவில் கலிமா பள்ளிவாசல் முத்தவல்லி பஷீர் அஹமது நன்றியுரை வழங்கினார். 

இந்நிகழச்சிக்கு வெளியூரிலிந்து மதரஸா மாணவர்களின் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டடிருந்தது.







படங்கள்: ஷேக் ஆதம் மழாஹிரி

9-ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா! (படங்கள்)

10:38 AM Edit This 0 Comments »
பரங்கிப்பேட்டை மீராப்பள்ளியுடன் இணைந்த அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யாவின் 9ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா கடந்த திங்கள் அன்று காலை மீராப்பள்ளியில், அதன் நிர்வாகி கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் தலைமையில் நடைப்பெற்றது. 

இதில் முஹம்மது முபாரக் அலி (மேலப்பாளைம்), உமர் ஃபாருக்  (பொதக்குடி) மற்றும் முஹம்மது அஷ்ரஃப் அலி (கடலூர்) ஆகிய மூன்று மாணவர்கள் ஹாஃபிழ் பட்டம் பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பட்டங்கள், தங்க பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும் கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான எம்.எஸ் முஹம்மது யூனுஸ், ஜக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் எம். ஹமீது அப்துல் காதர், மீராப்பள்ளி நிர்வாகிகளான எஸ். அலி அக்பர் மற்றும் ஜி.எம். நெய்னா மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துஸ்மது ரஸாதி கிராஅத் ஓதி துவக்கி வைத்தர்.

அதனைத் தொடர்ந்து வரவேற்புரையுடன ஆண்டறிக்கை வாசிக்கபடப்டது. மாணவர்களுக்கு பட்டம் (ஸனது) மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.  முன்னதாக மாணவர்களை வாழ்த்தி ஆலிம் பெருமக்கள் உரையாற்றினார்கள். 

விழா நிகழ்வை எம். முஹம்மது ஷேக் ஆதம் மழாஹிரி தொகுத்து வழங்கினார். விழா நிறைவில் கலிமா பள்ளிவாசல் முத்தவல்லி பஷீர் அஹமது நன்றியுரை வழங்கினார். 

இந்நிகழச்சிக்கு வெளியூரிலிந்து மதரஸா மாணவர்களின் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டடிருந்தது.







படங்கள்: ஷேக் ஆதம் மழாஹிரி

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் 71வது பட்டமளிப்பு விழா (படங்கள்)

12:15 PM Edit This 0 Comments »

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 152ம் ஆண்டு விழா 71வது பட்டமளிப்பு விழா இன்று காலை 9.30 மணியளவில் ஜாமிஆவின் தாருல் தப்ஸீர் கலைக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.

ஜாமிஆ தலைவர் ஹாஜி அப்துல் ஹமீது  தலைமை தாங்கினார் ஜாமிஆ செயலாளர் அப்துல் சமது  வரவேற்றார்.

வேலூர் பாக்கியாதுஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரி முன்னாள் முதல்வர் அல்லாமா ஜைனுல் ஆபீதீன் ஹள்ரத், சென்னை அடையார் மவுலவி சதீதுத்தீன் ஹள்ரத், ஆயங்குடி மவுலவி ஜாபர் அலி ஹள்ரத், ஜாமிஆ பேராசிரியர் அப்துஸ் ஸமது ஹள்ரத்,  ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார்கள்.

தவ்ரத்துல் ஹதீஸ் மவ்லவி ஃபாஜில், மவ்லவி ஆலிம், ஹாஃபிழ்  ஆகியோருக்கு  ஜாமிஆ முதல்வர் மவுலவி நூருல் அமீன் ஹள்ரத் ”ஸனது” பட்டம் வழங்கி வாழ்த்தினார்கள். ஜாமிஆ பொருளாளர் சார்பில் காசிம் ஹள்ரத்  நன்றி கூரினார்.

இறுதியாக ஜாமிஆ மூத்த பேராசிரியர் மவுலவி அப்துர் ரப் ஹள்ரத் துஆ உடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.















நன்றி: லால்பேட்டை எக்ஸ்பிரஸ்

கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா

10:50 PM Edit This 0 Comments »
தொடர்ந்து பதினொறாவது ஆண்டாக பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் நடைபெறும் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும், சிறார்களின் இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சியும் மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. 

ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி நிர்வாகி கலிமா K. ஷேக் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் Dr. M.S. முஹம்மது யூனுஸ், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் M. ஹமீத் அப்துல் காதர், மீராப்பள்ளி நிர்வாகிகள் I. இஸ்மாயில் மரைக்காயர், M.S அலி அக்பர், H.M.H. ஹனீஃபா ஆகியோர் முன்னிலை வகிக்க, தவ்லத் நிஸா அரபிக்கல்லூரி நிர்வாகி S.O சையத் ஆரிஃப் வாழ்த்துரை வழங்கினார்.

இவ்வருடமும் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையுடன் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப் சென்டரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் சில புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கு...








படங்கள்: ஷேக் ஆதம்

போக்குவரத்திற்கு தயாராகும் பக்கிங்ஹாம் கால்வாய்

1:10 AM Edit This 0 Comments »
சென்னை - ஆந்திரத்தை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாயில் படகுப் போக்குவரத்துத் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளாதாகவும், அதை மேற்கொள்வதற்கான திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று மத்திய நெடுஞ்சாலை & போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியத் தொழில் நிறுவன கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) சார்பில் தில்லியில் செவ்வாய்க்கிழமை (07.04.2015) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தெரிவித்தார்

பக்கிங்ஹாம் கால்வாய் தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய். சோழமண்டலக் கடற்கரைக்கு இணையாக ஓடும் கால்வாய். 

இக்கால்வாய் ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடாவில் இருந்து தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வரை செல்கிறது. 1806 ஆம் ஆண்டு வெட்டத் தொடங்கி பல கட்டங்களில் பல்வேறு ஏரிகளையும் ஆறுகளையும் இணைத்து உப்பு நீர் ஓடும் இக்கால்வாயின் நீளம் 420 கிலோ மீட்டர்கள்.

இக்கால்வாய் ஆங்கில ஆட்சியின் போது அமைக்கப்பட்டது. 19, 20ஆம் நூற்றாண்டுகளில் ஒரு முதன்மையான நீர்வழியாக இது விளங்கியது. இக்கால்வாய் கடற்கரையில் இருந்து சென்னைக்கு பொருட்களைக் கொண்டு செல்ல முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. 

சுதந்திரத்திற்குப் பிறகு கவனிப்பார் இல்லாமல் அழியத் தொடங்கியது. 2004 ஏற்பட்ட சுனாமியின் பொது பல லட்சம் உயிர்களை இது ஒரு வடிகாலாக இருந்து காப்பாற்றியது. 

தற்போது யாருக்கும், எதற்கும் உபயோகம் இல்லாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. 

எனவே, மீண்டும் பக்கிங்ஹாம் கால்வாய் நீர்வழிப்பாதை திட்டம் மேம்படுத்தப்பட்டால் போக்குவரத்தில் தமிழகம் மிகச்சிறப்பான இடத்தை பெறும். இலட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள். 

நமது அரசு செய்யுமா? 

என்ற கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு 23/12/2014 அன்று கோரிக்கை வைத்தேன் (எண்: 2014/812990/CR). 06.01.2015 அன்று பதில் வந்தது.

வந்த பதில்: 

The scheme for utilising the Buckingham canal as on inland water ways is under the consideration of the National Inland Waterway Authority and the same would be implemented in due course. Petitioner informed vide EIC WRD PWD Chepauk ch-5 lr.no.S7/CMP/CR/2014 dt 05.01.15.

மீராப்பள்ளியில் தொடங்கியது நல்லொழுக்க பயிற்சி வகுப்புகள்! (படங்கள்)

10:42 PM Edit This 0 Comments »
பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் திங்கள் கிழமை (27.04.2015) தொடங்கின. பதினொறாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இப்பயிற்சி பயிலரங்கத்தில் முதல் நாள் அன்று 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

ஆண் பிள்ளைகளுக்கும், 9 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளுக்கும் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், குறைந்த கட்டணத்தின் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், திறமையான ஆலிம்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஜமாஅத்துல உலமா சபையினர் தெரிவித்தனர்.

இப்பயிற்சி வகுப்புகள் முடிவடைந்ததும் தேர்வுகளும், போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. வெற்றி பெறும் மற்றும் கலந்துக் கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்ப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் திருக்குர்ஆனை முறைப்படி தஜ்வீதுடன் ஓதுவது, இஸ்லாமிய கொள்ளை விளக்கம், தொழுகை, ஹதீஸ் கலை, துஆக்கள் மனனம் போன்றவையுடன் உலமாக்களில் சொற்பொழிவுகளும் நடைபெற இருக்கின்றன.

இவ்வருடமும் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையுடன் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப் சென்டரும் இணைந்து இப்பயிற்சி பயிலரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.  










படங்கள்:  ஜஃபர் அலீ மன்பயீ & ஷேக் ஆதம் மழாஹிரி

கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி வகுப்புகள்; ஜமாஅத்துல் உலமா பேரவை ஏற்பாடு

11:34 PM Edit This 0 Comments »
பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் எதிர்வரும் திங்கள் கிழமை (ஏப்ரல் 27, 2015) தொடங்க இருப்பதாக அதன் நிர்வாகிகள் கூறினர். 

11வது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இப்பயிற்சி பயிலரங்கத்தில் கடந்த வருடங்களை போன்று இவ்வருடமும் அதிகமான பள்ளி மாணவ-மாணவியர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆண் பிள்ளைகளுக்கும், 5ம் வகுப்பு வரை படிக்கும் பெண் பிள்ளைகளுக்கும் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியிலும், காதிரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலிலும் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், குறைந்த கட்டணத்தின் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், திறமையான ஆலிம்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஜமாஅத்துல உலமா சபையினர் தெரிவித்தனர்.

இப்பயிற்சி வகுப்புகள் முடிவடைந்ததும் தேர்வுகளும், போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. வெற்றி பெறும் மற்றும் கலந்துக் கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்ப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் திருக்குர்ஆனை முறைப்படி தஜ்வீதுடன் ஓதுவது, இஸ்லாமிய கொள்ளை விளக்கம், தொழுகை, ஹதீஸ் கலை, துஆக்கள் மனனம் போன்றவையுடன் உலமாக்களில் சொற்பொழிவுகளும் நடைபெற இருக்கின்றன.

இவ்வருடமும் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையுடன் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப் சென்டரும் இணைந்து இப்பயிற்சி பயிலரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.